Saturday 4 June 2011

எச்சரிப்பின் செய்தி : "இவர்களுக்கு ஐயோ! "

யூதா 1:11. இவர்களுக்கு ஐயோ! இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து, பிலேயாம் கூலிக்காகச் செய்த வஞ்சகத்திலே விரைந்தோடி, கோரா எதிர்த்துப்பேசின பாவத்திற்குள்ளாகி, கெட்டுப்போனார்கள்.

1. காயீனுடைய வழி.

காயீனை குறித்து நாம் ஆதியாகமம் நான்காவது அதிகாரத்திலே முழுவதுமாக வாசிக்கிறோம்.
காயீனுடைய வழி என்பது தேவனுடைய திட்டமாகிய இரச்சிசிப்புக்கு எதிர்த்து நிற்குதல்.
காயீனுடைய வழி என்பது "பெருமை" , காயீன் முதல் கொலையாளி அதுவும் மதரீதியாக,
சரித்திர பூர்வமாகவும்.

2. பிலேயாம் கூலி.

பிலேயாம் கூலி என்பது "பொருளாசையை" (விக்கிரகாராதனையான பொருளாசை )
குறிக்கிறது.
பிலேயாம் கூலி என்பது தேவனுடைய ஜனங்களுக்கு விரோதமாக செயல் படுவது.
பிலேயாமைக் குறித்து நாம் எண்ணாகமம் 22 முதல் 25 வரையிலுள்ள அதிகாரத்தில் பார்க்கிரோம்.

3. கோராவின் எதிர்ப்பு.

கோராவின் எதிர்ப்பு என்பது ஊழியத்திற்க்கு விரோதமாக செயல் படுவது.
கோராவின் எதிர்ப்பு என்பது தேவனுடைய அழைப்புக்கு விரோதமாக செயல் படுவது.
என்று பொருள்.
கோராவின் எதிர்ப்பை குறித்து நாம் எண்ணாகமம் 16ஆம் அதிகாரத்தில் பார்க்கிரோம்.

No comments:

Post a Comment